ஆற்று வெள்ளத்தால் மூழ்கும் நிலைக்கு சென்ற யானை - நெஞ்சை பதறவைக்கும் காட்சி

x

கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் ஆற்றின் நடுவில் சிக்கிய காட்டுயானை:கேரளா மாநிலத்தில் கனமழை தொடர்வதால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் கனமழை தொடர்கிறது. சாலக்குடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில் அதிரப்பள்ளி அருகிலுள்ள சாலக்குடியில் ஆற்றின் நடுவில் ஒரு காட்டுயானை வெள்ளத்தில் சிக்கியுள்ளது.யானையால் வெள்ளத்தை கடந்து கரைக்கு வரமுடியாமல் சிக்கி தவிக்கிறது. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக வனத்துறையினரலும் யானைக்கு உதவ முடியாமல் தவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்