ரயில் பெட்டி மீது விழுந்த மின் கம்பம் - சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பரபரப்பு

x

ரயில் பெட்டி மீது விழுந்த மின் கம்பம் - சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருக்கக்கூடிய பேசின் பாலத்தின் பக்கத்தில் ரயில்வே யார்டில் மின்கம்பம் சரிந்து ரயில் பெட்டி சேதமடைந்தது.

ரயில் பெட்டிகள் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் இங்கு நடைபெறும் நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில் புயலால் மின்கம்பம் சாய்ந்து ரயில் பெட்டி மீது விழுந்துள்ளது.

சென்னையிலிருந்து ஆலப்புழா செல்லக்கூடிய விரைவு ரயில் மீது விழுந்த நிலையில், உடனடியாக ரயில்வே ஊழியர்கள் மின்கம்பத்தை சரி செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்