வீட்டில் வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு.. துண்டான ரவுடியின் கைகள் - சென்னையில் நடந்த பயங்கரம்

x

சென்னை அம்பத்தூரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்த‌தில் பிரபல ரவுடியின் 2 கைகளும் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.


இந்நிலையில், விஜயகுமார் தனது கூட்டாளியான கார்த்தியுடன் சேர்ந்து, தனது வீட்டு மாடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார்.


அப்போது எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் கார்த்திக்கின் இரு கைகள் மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.


மருத்துவர்கள் கார்த்திக்கின் இரு கைகளையும் அகற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 நாட்களுக்கு முன் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த‌தை அடுத்து,


விஜயகுமாரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் போலீசார் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்