12ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக புகார்... பாஜக முன்னாள் நிர்வாகி போக்சோவில் கைது

x

திருச்சியில் 12ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறியதோடு, அவரை ஏமாற்றி கொலை மிரட்டல் விடுத்த பாஜக முன்னாள் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர், பாஜகவின் இளைஞரணி மாவட்ட செயலாளராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சத்திரம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு பயிலும் மாணவியிடம், காதலிப்பதாக கூறியதோடு, அவரை ஏமாற்றி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வினோத்தை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

முன்னதாக, அவரை பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கட்சி தலைமை நீக்கியது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்