அத்தியாவசிய பொருட்கள் விலை கட்டுக்குள் இருக்க மத்திய அரசே காரணம் -மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திர நாத் பேச்சு

x

மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளதாக அதிமுக எம்.பி. ரவீந்திர நாத் தெரிவித்துள்ளார். மக்களவையில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக எம் பி ரவீந்திரநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர், உலகின் மிகப் பெரும் பொருளாதாரம் கொண்ட நாடுகளுடன் இந்தியாவின் நுகர்வோர் குறியீட்டை ஒப்பிடும் போது மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் பொருளாதார மீட்பு மிக வேகமாக உள்ளது தெளிவாகிறது என்றார். இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி, இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதாரம் கொண்ட நாடாக விளங்குகிறது என்றும் எம்.பி ரவீந்திரநாத் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்