பக்தர்களால் நிரம்பிவழிந்த அக்னி தீர்த்த கடற்கரை

x

ஆடி ஞாயிற்று கிழமையொட்டி ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி அளித்து பிரார்த்தனை மேற்கொண்டனர். ஆடி ஞாயிற்று கிழமையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ள பக்தர்கள், முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் அளித்து வருகின்றனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை பக்தர்களால் நிரம்பியுள்ளது. ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்