கட்டுமான நிறுவனங்களில் அதிரடி சோதனை - கோடிக்கணக்கில் பணம், தங்கம் பறிமுதல்

x

அரசு ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமான நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 150 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடந்த 20 ஆம் தேதி சென்னை, மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் ஜெயபாரத் பிளாஷ்வே சிட்டி, அன்னை பாரத், ஆர்ஆர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அதில் கணக்கில் வராத 150 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனைகளின் முடிவில் 14 கோடி ரூபாய் ரொக்கமும்,10 கோடி ரூபாய் அளவிலான தங்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்