தமிழக காவல்துறைக்கு டிஜிபி கொடுத்த அதிரடி உத்தரவு..!

x

குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை உபயோகப்படுத்தவும் தயங்க கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை மாவட்ட காவல் ஆயுதப்படையில் நகர்ப்புற பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகன திட்டத்தையும், ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் திறந்து வைத்தார். குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் செல்லும்போது போலீசாரை குற்றவாளிகள் தாக்கும் சூழல் ஏற்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் தயங்க கூடாது என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்