கஞ்சா விற்பனை குறித்து விசாரணையில் தாக்க முயன்றதாக குற்றவாளி புகார் - கையை அறுத்து போராட்டம்...

x

சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சரித்திரபதிவேடு குற்றவாளி, கையை பிளேடால் அறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளி சீனிவாசன். இவர் மீது பல வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவர் வசிக்கும் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், கஞ்சா கும்பல் குறித்து தகவல் அளிக்காத சீனிவாசனை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் மூன்று முறை புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி காவல் ஆணையர் அலுவலகத்தின் முன் கையை பிளேடால் அறுத்து சீனிவாசன் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தில் சீனிவாசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்