"கணக்கு படம் ரொம்ப கஷ்டம்" மாணவிகள் செய்த நூதன செயல் - பள்ளியில் நடந்த சுவாரஸ்யம் | Kanyakumari

x

கணக்கு படம் ரொம்ப கஷ்டம்" மாணவிகள் செய்த நூதன செயல் - பள்ளியில் நடந்த சுவாரஸ்யம்

நாகர்கோவிலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், எளிதில் புரியாத கணக்கு பாடங்களை காகிதத்தில் எழுதி மரத்தில் தொங்க விட்டுச் செல்லும் மாணவிகளின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

கணக்கு பாடத்தில் வரும் சூத்திரங்கள் எளிதில் புரியவில்லை என கவலை அடையும் மாணவிகள், அந்த பாடங்களை காகிதத்தில் எழுதி பள்ளி வளாகத்தில் உள்ள மூங்கில் மரத்தில் தொங்க விட்டுச் செல்கின்றனர்.

பின்னர், இடைவேளை நேரங்களில் அந்த சூத்திரங்களை பார்த்து விட்டுச் சென்றால், எளிதில் புரிந்து விடுவதாக கூறுகின்றனர்.

மாணவிகளின் இந்த நூதன முயற்சி ஆசிரியர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்