மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு - உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

x

தமிழகத்தில் மின்சார மானியம் பெற, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

இதை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ரவி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மின்சார மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து டிசம்பரில் உத்தரவிட்டது.

இந்நிலையில் இத்தீர்ப்புக்கு எதிராக எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக தமிழக அரசின் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்