குடும்ப எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண்... பிறந்த குழந்தையை பார்க்க வராத பெற்றோர் - வேதனையில் பெண் தூக்கிட்டு தற்கொலையா?

x

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கஞ்சியூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் அருண்.

இவருக்கும் கெளசல்யா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில், இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், குடும்பை எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் கெளசல்யாவின் பெற்றோர்கள் குழந்தையை பார்க்க வரவில்லை எனவும், அதனால் மன உளைச்சலில் இருந்த கெளசல்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்