கணவனை கூலிப்படை வைத்து கொன்ற மனைவி... ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை

x

பல்லடம் பனியன் தொழிலாளி கொலை வழக்கில், மனைவி சுசீலா உட்பட ஏழு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த மே மாதம், கோபால் என்ற பனியன் தொழிலாளி மர்ம கும்பலால், கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில் கோபாலின் மனைவி சுசீலா, அவரது கள்ளக்காதலன் மாரீஸ்வரன் என்பவரோடு இணைந்து கூலிப்படையின் மூலம் கொலை செய்தது தெரிய வந்தது. வழக்கில் தொடர்புடைய சுசீலா, மாரீஸ்வரன் உட்பட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய அன்புச்செல்வன் என்பவரை தவிர, மற்ற ஏழு பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில், 7 குற்றவாளிகள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்