ஒய்யாரமாக ஒக்காந்து கொண்டிருந்த புலி - கிராம மக்கள் அச்சம்

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில், குளத்தின் அருகே புலி ஒன்று ஒய்யாரமாக படுத்திருந்ததை கண்ட கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.
x

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், வனத்துறையினர் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிய வந்தது. இந்நிலையில், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே, புலி ஒன்று படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை செல்போனில் வீடியோ எடுத்த சிலர், தங்களின் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஆட்கள் நடமாட்டத்தை கண்ட புலி சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.


Next Story

மேலும் செய்திகள்