திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய்... ஒரிஜினல் போலீஸிடம் சிக்கிய போலி போலீஸ்

x

திருவண்ணாமலை அருகே போலீஸ் எனக்கூறி பணம் பறிக்க முயன்ற ஆசாமி வீடியோவின் உதவியால் வசமாக சிக்கினார்.

ஆரணி அருகே வெட்டியாந்தொழுவம் காப்புக்காட்டில் விஸ்வநாதன் என்பவர் தன் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அங்கு வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் தன்னை போலீஸ் என கூறி விஸ்வநாதன் வசமிருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றார்.

இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஓட்டுநரான பெருமாள் இதில் ஈடுபட்டது உறுதியான நிலையில் அவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்