சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய இளைஞர்கள் - பிடித்து விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை, போதைக்காக பயன்படுத்திய ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்தியூரில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, மருத்துவர்கள் பரிந்துரை இன்றி, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை 14 ஆயிரம் ரூபாய்க்கு ஆன்லைலின் வாங்கியது தெரிய வந்த‌து. அவற்றை பொடியாக்கி ஊசி மூலம் போதைக்காக பயன்படுத்தியது தெரிய வந்த‌தால், 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 மாத்திரைகள் கொண்ட 10 அட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்