கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் வாங்கிவிட்டு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

கோயம்பேடு சந்தைக்கு வரும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர், கோயம்பேடு சந்தையில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு காய்கறிகள் வாங்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட செல்வம், சரவணன், ஹரி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து,அவர்களிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்