குலுங்கிய கட்டிடங்கள்...வீதிக்கு ஓடி வந்த மக்கள்...ஜப்பானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

x

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவானது. அங்கு, உள்ளூர் நேரப்படி மதியம் 01.39 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 350 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நிலையில், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பிற நகரங்களிலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.


Next Story

மேலும் செய்திகள்