கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர்.. மீன் பிடிக்கச் சென்ற போது சோகம்

x

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர்.. மீன் பிடிக்கச் சென்ற போது சோகம்

காட்டுமன்னார்கோவில் அருகே, கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற நபர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். எய்யலூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் என்பவர், கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அதிகளவு தண்ணீர் சென்றதால், ஆற்றில் சங்கரன் இழுத்துச் செல்லப்பட்டார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறையினர், பைபர் படகு மூலம் சங்கரனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்