திருச்சியில் மது போதையில் தாறுமாறாக காரை ஓட்டி 15 பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய நபர் கைது

x

திருச்சியில் மது போதையில் தாறுமாறாக காரை ஓட்டி 15 பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சையில் திருச்சி நோக்கி கார் ஒன்று அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

இந்த காரை ஓட்டி வந்த நபர், செங்கிப்பட்டி, வளம்பக்குடி, துவாக்குடி, திருவெறும்பூர், கைலாஷ் நகர் உள்ளிட்ட இடங்களில் 3 பெல் ஊழியர்கள் உட்பட 15பேர் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் வந்ததாக தெரிகிறது.

ட்ராபிக் சிக்னலில் காரை மடக்கிய போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் தஞ்சாவூரை சேர்ந்த ஆரோக்கிய லூர்து நாயகம் என்பதும் மது போதையில், சுமார் 50 கிலோமீட்டர் முன்பக்க டயர் தேய்ந்து ரிம்முடன் காரை வேகமாக இயக்கியதும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து வழக்கு பதிவு செய்த காந்திமார்க்கெட் போலீசார், அந்த நபரை திருவெறும்பூர் போலீஸில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்