சிகிச்சை முடிந்து பஸ்சில் ஏறிய நபர் இருக்கையில் உயிரிழப்பு - ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

x

மதுரையில் சிகிச்சை பெற்ற பிறகு, பேருந்திலேயே ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த கனி இப்ராஹிம் என்பவர், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், பேருந்தில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். ராமநாதபுரத்தை பேருந்து சென்றடைந்த நிலையில், கடைசி இருக்கையில் இப்ராஹிம் படுத்த நிலையில் அசைவின்றி கிடந்துள்ளார். தகவலறிந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சோதித்ததில், இப்ராஹிம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இப்ராஹிம் உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்