வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் சடலமாக மீட்பு... மரணத்திற்கு என்ன காரணம்? - போலீசார் விசாரணை

x

கேரள மாநிலம் காசர்கோடு குண்டம்குழி பகுதியை சேர்ந்தவர் சந்திரன்.

இவரின் மனைவி நாராயணி. மகள் 12 வயதான ஸ்ரீநந்தா.

சுற்றுலா பேருந்து ஓட்டுநரான சந்திரன் ஊட்டிக்கு சென்ற நிலையில் வீட்டில் மனைவியும், மகளும் இருந்தனர்.

இதனிடையே மனைவிக்கு போன் செய்த போது நீண்ட நேரமாகியும் போனை எடுக்காததால் சந்தேகத்தின்பேரில் நண்பரை நேரில் சென்று பார்க்க சொல்லியிருக்கிறார்.

அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் உள்ளே நாராயணி தூக்கில் தொங்கிய நிலையிலும், மகள் ஸ்ரீநந்தாவும் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்ட சூழலில் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்