17 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்... கிரிக்கெட் உலகமே திரும்பி பார்க்கும் சம்பவம்

x

17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்றுள்ளது. பாகிஸ்தானில் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ள டி20 தொடரில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோத உள்ளன. இதற்காக கராச்சி விமான நிலையம் சென்ற இங்கிலந்து வீர‌ர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லாகூரில் 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீர‌ர்கள் சென்ற பேருந்து மீது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் மற்றும் 2 பொதுமக்கள் உயிரிழந்தனர். அதனால், பெரும்பாலான நாடுகள் பாகிஸ்தான் செல்லாமல் இருந்தன. இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்