ரயில் முன்பு பாய்ந்த காதல் ஜோடி...பரங்கிமலையில் பரபரப்பு

x

சென்னை பரங்கிமலை பகுதியில், ரயில் முன் பாய்ந்து, காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றதில், இளம்பெண் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே, தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் முன்பு, திடீரென காதல் ஜோடி பாய்ந்துள்ளனர்.

இதில் 19 வயதான இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இளைஞர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், 2 பேரின் செல்போன்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்