"காதலன் கொடுத்த தொல்லை" தூக்கில் தொங்கிய காதலி - சிக்கிய இளைஞர்

x

குமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்த திவ்யா, சூழிகோணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திவ்யா பிரிந்து சென்றதால், காதலித்த போது சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாகக் கூறி தொடர்ந்து தொந்தரவு செய்த‌தாக தெரிகிறது.

இதனால், திவ்யாவின் தம்பி றோசன் மேத்தியூ தட்டிக் கேட்ட போது, நண்பர்களுடன் சேர்ந்து ரஞ்சித் தாக்கியுள்ளார்.

இதனால், மனமுடைந்து காணப்பட்ட திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே, திவ்யாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆனால், தனது மகளுக்கு பல உதவிகளை செய்த இளைஞரை கைது செய்து வழக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள பெற்றோர், உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்