ரவுடிகளுக்குள் நடந்த தகராறு - சக ரவுடி வெட்டிக் கொலை - சென்னையில் அரங்கேறிய பயங்கரம்

x

சென்னை பள்ளிக்கரணையில் இருதரப்புக்கு இடையே நடந்த மோதலில், ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் சிலர் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது, மேடவாக்கத்தைச் சேர்ந்த ரவுடி பிரைட் ஆல்வின் என்பவர், தலை, கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மேலும், ஆல்வின் நண்பர் பெருமாள் என்பவரும் காயமடைந்த நிலையில், இருவரையும் மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பிரைட் ஆல்வின் வரும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பிரைட் ஆல்வின் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், கஞ்சா விற்பனை செய்வதில் இவருக்கும், மணி என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆல்வின் கஞ்சா விற்பனை தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்