முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு? | Former President Trump
அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக, முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் குற்றசாட்டு பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி வாஷிங்டன் டிசியில் உள்ள நாடாளுமன்றத்திற்குள் புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், டிம்பின் தொடர்பு குறித்து நாடாளுமன்ற குழு விசாரித்து வந்தது. இந்நிலையில் விசாரணை முடிந்ததை அடுத்து, டிரம்ப் மீதான குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
Next Story