புதிய வீட்டுக்கு குடியேறிய தம்பதி..கதவை திறந்ததும் மகளுக்கு அதிர்ச்சி-சென்னையில் அரங்கேறிய கொடூரம்

x

சென்னை பல்லாவரம் அருகே பூட்டிய வீட்டிற்குள் கழுத்தறுப்பட்ட நிலையில் கணவன், மனைவி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜமீன் ராயபேட்டையை சேர்ந்த பூ வியாபாரி ஆறுமுகம். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவரும் தனித்தனி குடும்பமாக வசித்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆறுமுகம், மஞ்சுளா இருவரும் புதிதாக வீடு ஒன்றை வாடகை எடுத்து குடியேறியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தாய், தந்தை இருவரும் வீட்டிற்கு வராததால், மூத்த மகள் அவர்களை நேரில் பார்க்க சென்றுள்ளார். அப்போது கதவு பூட்டியிருந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் உதவியுடன், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, கழுத்தறுபட்ட நிலையில் ஆறுமுகம், மஞ்சுளா இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த சிட்லப்பாக்கம் போலீசார், சடலங்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்