காவல் அதிகாரியின் சமூகத்தை குறிப்பிட்டு பேசிய விசிக பிரமுகர் - தீயாய் பரவும் வீடியோ | Arani

x

ஆரணி காவல் நிலையத்தில், காவல் அதிகாரிகளை சமூகத்தை குறிப்பிட்டு ஒருமையில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், கடையை ஆக்கிரமிப்பு செய்ததாக விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது, சின்னகண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். அதேபோல சின்னகண்ணன் மீது தங்களை தரக்குறைவாக பேசியதாக விடுதலை சிறுத்தை கட்சியினரும் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இருதரப்பினரும் ஆரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றுள்ளனர். அப்போது விசிக பிரமுகர், காவல் அதிகாரிகளை சமூகத்தை குறிப்பிட்டும், ஒருமையில் பேசி மிரட்டியதாலும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்