காரும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து... விபத்தில் 5 பேர் பலி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

x

கேரளாவில் காரும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஆலப்புழா மாவட்டம் அம்பலப்புழா ரயில்வே மேம்பாலத்தின் மேல் கொல்லத்தில் இருந்து சென்ற காரும், ஆந்திராவிற்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 5 பேரில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதீத வேகத்தில் கார் சென்றதே விபத்திற்கு காரணம் என தெரியவந்த நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்