சேறு போல் ஓடும் வெள்ளத்தில் ஆற்றின் நடுவே பாறையில் சிக்கிய சிறுவன் - பதைபதைக்கும் காட்சி

x

சேறு போல் ஓடும் வெள்ளத்தில் ஆற்றின் நடுவே பாறையில் சிக்கிய சிறுவன் - பதைபதைக்கும் காட்சி


பாகிஸ்தானில் ஆற்று வெள்ளத்திற்கு நடுவே பாறையில் தவித்து வந்த சிறுவன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். பாகிஸ்தானில் சிந்து, பலுசிஸ்தான், கைபர் ஆகிய மாகாணகளில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பள்ளத்தாக்குகள் நிறைந்த கைபர் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கால் நெடுஞ்சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனிடையே, ஆற்று வெள்ளத்தின் நடுவே பாறையில் ஏறி தப்பிக்க போராடிய சிறுவனை, ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் மீட்டது. இதே போன்று, வெள்ளத்தால் வீட்டு கூரைகளில் தவித்து வந்த 75க்கும் மேற்பட்டோரையும் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்