75வது சுதந்திர தினக் கொண்டாட்டம் - இலங்கைக்கு இந்தியா கொடுத்த கிஃப்ட்

x

75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இந்தியா இலங்கைக்கு கடல்சார் கண்காணிப்பு விமானத்தை நன்கொடையாக வழங்கி உள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்து உள்ளது. தரையிறங்கிய விமானத்தை தண்ணீர் பீய்ச்சி அடித்து அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். இதில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் பங்கேற்றனர். பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில், டோனியர்-228 விமானம் பரிசளிக்கப்பட்டு உள்ளதாக இந்திய தூதர் கோபால் பாக்லே கூறி இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்