சிட்லப்பாக்கத்தில் 75 மாணவர்கள், 75 நிமிடத்தில் உலக சாதனை... திருக்குறள், இந்திய சாதனைகளை அசத்தல்

x

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்கள் உலக சாதனை புரிந்தனர். தனியார் பள்ளியை சேர்ந்த 75 மாணவர்கள் சேர்ந்து தேசிய கொடியை ஏந்தி, வந்தே மாதரம் முழங்க, திருக்குறள் மற்றும் இந்தியாவின் சாதனைகளை 75 நிமிடத்தில் கூறி உலக சாதனை புரிந்துள்ளனர். சாதனையை உறுதி செய்த ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், பள்ளிக்கு விருதையும், பதக்கத்தையும் வழங்கியது.


Next Story

மேலும் செய்திகள்