13 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை- சிக்கிய 62 வயது பூசாரி -அதிர வைத்த நீதிமன்ற தீர்ப்பு

x

கோவிலில் சேவை செய்த 13 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 62 வயதான பூசாரிக்கு 13 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்த 62 வயதான நடராஜன், பணி செய்யும் 13 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதுடன், சாக்லேட் மற்றும் பணம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக, 2016 - ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமகள், பூசாரி நடராஜனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டத்தின் கொலை மிரட்டல் பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இரு தண்டனைகளையும் தனித்தனியாக அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இது தவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 5 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்