6 கிலோ தங்க நகைகள் கொள்ளை சம்பவம் - பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு

தஞ்சை தனியார் உணவகத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பணியாளர்கள் வேடத்தில் கொள்ளையர்கள் 6 கிலோ நகைப்பையைத் திருடிச் செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
x

தஞ்சை தனியார் உணவகத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பணியாளர்கள் வேடத்தில் கொள்ளையர்கள் 6 கிலோ நகைப்பையைத் திருடிச் செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னையைச் சேர்ந்த நகை மொத்த வியாபாரியான மணி, தஞ்சை உணவகத்தில் உணவு சாப்பிட்டு விட்டு அங்கு நின்றிருந்த கருப்பு நிற சீருடை அணிந்திருந்தவர்களிடம் பணம் கொடுத்துள்ளார். பணத்தை அளித்து விட்டு திரும்பிய போது அவர் வைத்திருந்த நகைப்பை காணாமல் போயிருந்தது. சீருடை அணிந்த பணியாளர்களும் மாயமாகியுள்ளனர். இது குறித்து மணி அளித்த புகாரின் பேரில் 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்