முதியோர்களுக்கு கொடுக்க வைத்திருந்த வேட்டி, சேலை... மூட்டைகளுக்கு நடுவே ஐந்து அடி நீள பாம்பு - அதிர்ச்சியில் உறைந்து போன ஊழியர்கள்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஐந்து அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முதியோர்களுக்கு வழங்குவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலை மூட்டைகளுக்கு நடுவே ஐந்து அடி நீளம் கொண்ட பாம்பு இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்கு கொண்டுச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்