"ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்தில் 30 பேர் தற்கொலை" திமுக எம்பி டி.ஆர்.பாலு

x

மக்களவையில் பூஜ்ய நேரத்தின் போது பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தோர் உறவுகளையும், குடும்பத்தையும் தவிக்கவிட்டு விட்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். குடும்பங்களின் அந்தஸ்தை கெடுக்கும் ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்தில் 30 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்ட டி.ஆர். பாலு, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்துள்ளதாகவும் எடுத்துரைத்தார். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்ததாக கூறி டி.ஆர். பாலு பேசி கொண்டிருந்த போது, வேறொரு உறுப்பினரை பேச சபாநாயகர் ஓம்பிர்லா அழைத்தால் அவையில் கூச்சல் நிலவியது. பின்னர், திமுக உறுப்பினர்களை சமாதானப்படுத்திய சபாநாயகர், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக நோட்டீஸ் வழங்குமாறு அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்