3 ஆண்டு.. நான்கு நபர்கள்... 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - போக்சோவில் கைது..

x

கடலூரில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக மன வளர்ச்சி குன்றிய சிறுமி ஒருவர் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் சிறுது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், திடீரென பள்ளிக்கூடம் போக மறுத்து வீட்டிலேயே முடங்கியிருந்ததால் பெற்றோர் சந்தேகமடைந்துள்ளனர். விசாரணையில், இடையன்பால்செரி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஜெயசூர்யா, முதியவர் ஜெயராமன் மற்றும் அமலநாதன் ஆகியோர் 3 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், போக்சோ வழக்கின் கீழ் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்