தவறான சிகிச்சையை சரிசெய்ய 3 அறுவை சிகிச்சைகள்... மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..!

தவறான சிகிச்சையை சரிசெய்ய 3 அறுவை சிகிச்சைகள்... மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..!
x

எடப்பாடி அருகே மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம் பெண் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அம்மன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சவுரியூர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவர் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கே அவருக்கு முதலில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அதனை சரி செய்வதற்காக அடுத்தடுத்து 3 முறை அறுவை சிகிச்சை செய்ததாகவும், இதனால் சங்கீதாவிற்கு கடுமையான அஜீரணக் கோளாறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, மூச்சு திணறல் காரணமாக சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்