பிப்ரவரி 25ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | TNPSC

x

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தகுதி பெற்றவர்கள் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறும் முதன்மை தேர்வில் பங்கேற்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது .

கடந்த மே மாதம் 21ஆம் தேதி குரூப் 2 முதல் நிலை தேர்வு நடந்தது. இதில் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதன் முடிவுகள் பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்டன. இதில் தகுதி பெற்றவர்களின் பெயர் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறும் முதன்மை தேர்வில் பங்கேற்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கு, நவம்பர் 17ஆம் தேதி முதல், டிசம்பர் 16ஆம் தேதி வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்