2023ம் ஆண்டு ஐபிஎல் ஏலம்..! - குதூகலத்தில் ஐபிஎல் அணிகள்..!-உற்சாகத்தில் ரசிகர்கள்..!

x

2023ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 23ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. மெகா ஏலமாக இல்லாமல் மினி ஏலமாக இது நடத்தப்பட உள்ளது. அணிகளுக்கான அதிகபட்ச தொகை 5 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டு , 95 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விடுவிக்கும் வீரர்கள் குறித்த பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் அணிகள் வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மினி ஏலத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ், சாம் கரன் உள்ளிட்ட வீரர்களை எடுப்பதில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்