ஒரே பெண்ணை காதலிக்கும் 2 இளைஞர்கள் - காதலனை தாக்கிய மற்றொரு காதலன்

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தான் காதலிக்கும் பெண்ணை காதலித்த நபரை, நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோகுலகண்ணன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவர், ஒரே பெண்ணை காதலித்து வருகின்றனர்.

இதனால் இந்த இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோகுலகண்ணனின் வீட்டிற்கு, நண்பர்களுடன் சென்ற பிரகாஷ், அவரை தாக்கியுள்ளார்.

இதுதொடர்பான புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட பாலமுருகன், ரகு ஆகியோரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்