திடீரென காணாமல் போன +2 மாணவிகள்... பெற்றோருக்கு வந்த போன் கால்.. சிக்கிய கடிதம்

x

சேலம் மாவட்டம், சூரமங்கலம் அருகே, கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளியில் இருந்து மாயமான 3 மாணவிகளை, ஓமலூர் அருகே காவல் துறையினர் மீட்டனர்,

அந்த மாணவிகள் 3 பேரும், நகரமலை அடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற அவர்கள், மாலை வீட்டுக்குச் செல்லாமல், வகுப்பறையில் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார்கள். இதுகுறித்த புகாரின்பேரில், சூரமங்கலம் போலீசார் தேடி வந்த நிலையில், ஓமலூர் செல்லும் பேருந்தில் இருந்து ஒரு மாணவி நடத்துனரின் செல்போனில் இருந்து பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசினார். இதையறிந்த போலீசார் உடனடியாக செயல்பட்டு மாணவிகள் மூவரையும் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது படிப்பின் அதிகப்படியான அழுத்தம் காரணமாக சென்றுவிட்டதாக மாணவிகள் கூறினர். இதையடுத்து, மாணவிகளுக்கு அதிகப்படியான‌ அழுத்தம் தரக்கூடாது என்று பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்