19 வயது கடத்தல் மன்னி..ஒரே ட்ரிப்பில் 2 கிலோ கடத்தல் - ஆடையில் மறைத்ததை கண்டறிந்த ஆபீசர்ஸ்..

x

துபாயில் இருந்து 1884 கிராம் தங்கத்தை கடத்தி வந்த 19 வயதான இளம்பெண் கேரளாவில் சிக்கினார். காசர்கோட்டை சார்ந்த 19 வயதான இளம் பெண் ஷகலா என்பவர் துபாயிலிருந்து - கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இவர் தனது ஆடையில் ஒரு கோடி மதிப்புடைய 1884 கிராம் தங்கத்தை தைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதன்பேரில் அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் கடத்தல் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்