15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான விவகாரம் - குற்றவாளிக்கு கேரள போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x

கேரளாவில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், 2 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டி வீட்டுக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு, சில நாட்கள் கழித்து உடல்நிலை பாதித்துள்ளது.

மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

பத்தனம்திட்டாவை சேர்ந்த 37 வயதான பினு என்பவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

பின்பு காவல் நிலையத்தில் போக்சோ வழக்காக பதிவுசெய்த நிலையில், போலீசார் பினுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்றம், குற்றவாளிக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டரை லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.


Next Story

மேலும் செய்திகள்