இன்றைய தலைப்பு செய்திகள் (22-01-2023)

இன்றைய தலைப்பு செய்திகள் (22-01-2023)
x


சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சி...52 தீயணைப்பு வீரர்கள், 6 தீயணைப்பு வாகனங்கள் ஒத்திகை நிகழ்வில் பங்கேற்பு...

திருச்சி திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை...கொள்ளையர்கள் கைவரிசை... டிஎஸ்பி தலைமையில் தனிப்படைகள் அமைப்பு..

பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக விழாவின் முதல் கால யாக பூஜை தொடங்கியது...83 யாக வேள்வி குண்டங்களில், 150 சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க யாகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குகிறது தேமுதிக...ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தை வேட்பாளராக நிறுத்த முடிவு...

சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை...ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 87 பேர், தலைமை கழக நிர்வாகிகள் 114 பேர் பங்கேற்பு...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் விருப்ப மனு...சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம்...

ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்தரப்பு வேட்பாளருக்கு டெபாசிட் பறிபோகும்...மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதரவு யாருக்கு?.....நாளை மறுதினம் நடைபெறும் அவசர நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் முடிவு...

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார் ஈவிகேஎஸ் இளங்கோவன்...அதிமுக இரண்டாக உடையவில்லை நான்காக உடைந்துள்ளதாகவும் பேட்டி..

ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணி தீவிர தேர்தல் பிரச்சாரம்...அமைச்சர் முத்துசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் உள்ளிட்டோர் வாக்குசேகரிப்பு....


Next Story

மேலும் செய்திகள்