"100% அனைவருக்கும் கண்டிப்பாக வேலை".. "கொடுக்கும் வேலையை வாங்கிக் கொண்டு போராடுங்கள்"

x

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உணவு பாதுகாப்பு துறையில் 4 நடமாடும் உணவு பகுப்பாய்வகங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தரமற்ற உணவுகளை விநியோகித்த நபர்கள் மீதான வழக்குகள் மூலம் உரிமையியல் நீதிமன்றத்தில் 6 கோடியே 17 லட்சம் ரூபாயும், குற்றவியல் நீதிமன்றத்தில் 18 லட்சம் ரூபாயும் அபராதம் வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அத்துடன், ஒப்பந்த செவிலியர்களுக்கு 100 சதவீதம் பணி கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த அவர், இதையும் மீறி சில செவிலியர்கள் தேவையின்றி போராடி வருவதாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்