கேரளா மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

x

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையடுத்து, கேரள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கேரள கடல் பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்