இந்திய வம்சாவளி இளைஞர்கள் இருவர் உட்பட அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பள்ளி நண்பர்கள் ஸ்டார்ட்அப் மூலம் 22 வயதில் கோடீஸ்வரர்களாகி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சாதனையை முறியடித்துள்ளனர். முன்னதாக மார்க் ஜூக்கர்பெர்க் தனது 23 வது வயதில் சுய தொழில் மூலம் கோடீஸ்வரர்களான பட்டியலில் புது சாதனை படைத்திருந்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் ஜோஸில் உள்ள பள்ளியில் பயின்ற சூர்யா மிதா, ஆதர்ஷ் ஹைரேமத் ஆகிய இரண்டு இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரென்டன் பூடி ஆகிய மூவரும் இணைந்து தொடங்கிய மெர்கோர் என்ற ஏஐ நிறுவனம் போர்ப்ஸ் அறிக்கையின்படி, 350 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. இதன்மூலம் அந்நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.