ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா தொற்று - 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

தாய்லாந்து நாட்டில் ஒரே நாளில் 500 பேருக்கும் மேல் கொரோனா தொற்று உறுதியான நிலையில், பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.;

Update: 2020-12-21 08:14 GMT
 தென்மேற்கு சமூத் சகோன் பகுதியில், 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவருமே இறால் மார்க்கெட்டோடு தொடர்புடையவர்கள் என்பதும், அதில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வருகிற புதன் கிழமைக்குள் இப்பகுதியில், 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியில், அரசு தீவிரம் காட்டுகிறது.  


Tags:    

மேலும் செய்திகள்